Posted In:
கவிதை துளிகள்
.
By Roshan
நீ
என்னைத் தேடி
வருகிறாய்
நான்
நீயாக மாறி
என்னைத்
தேடுகிறேன்
********************
நடைபயிலும்
குழந்தையாய்
வருகிறாய்
தாயாய் என்
கவனம் எல்லாம்
உன் மேல்
******************
நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்
*****************
நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா
என்ற குளப்பத்தை
சாதுரியாமாய்
தீர்த்து வைத்தாய்
கைகூப்பி
வணக்கம் சொல்லி
*******************
உன்
தாவணிக்கு
எப்போது
என் தாயின்
கைவிரல்கள்
முளைத்தது
தடவியதும்
குழந்தையாய்
உறங்கி விட்டேனே
****************
0 Responses to
Something to say?