Posted In:
கவிதை துளிகள்
.
By Roshan
என்னை பிரிந்த என் தாய்
படும் துயறை..........
நான் உன்னை பிரிந்து
கண்டுகொண்டேன்.............
****************************
என் கல்லறையில் பூக்கள்
தூவாதே...
மலர்ச்செடி ஒன்றை
நட்டுவிட்டு போ...
அவை
பூக்கள் உதிர்க்கும்போதெல்லாம்
நீ கண்ணீர் சிந்துவதாய்
ஆறுதல்கொள்வேன்.....
****************************
சிலந்தியால் உன்னை சிறைவைக்க நினைத்து
மனதினால் உன்னை மறைத்து வைத்தேன்
சிறகுகள் முளைத்து பறந்து விட்டாய்......
**************************
முன்றுமணிநேர
தொலைபேசி பேச்சுக்கு
முற்றுப்புள்ளியாய்
ஒரு முத்தம் கேட்டேன்
முற்றுப்புள்ளி ஏனோ
காற்புள்ளியானது...
அந்த இரவிலே.................
*************************
சூரிய வெளிச்சத்தைப் பார்த்தால் பூக்கள் சிரிக்கும்
பூக்களை பார்த்ததும் சூரியன் சிரிக்கும்
பாவம் அதற்குத் தெரியாது....! தன்னை
சுட்டெரிக்கப் போவது சூரிய ஒளிதான் என்று
அது போலத்தான்......
என்னைப் பார்த்து நீ சிரித்தாய்
உன்னைப் பார்த்து நான் சிரித்தேன்
அப்போது தெரியவில்லை எனக்கு
என்னை சுட்டெரிக்கப் போவது நீ தான் என்று..............
**************************
0 Responses to
Something to say?